Friday, 29 May 2015

நாட்குறிப்பின் ஒற்றைப்பக்கம்




இதே போன்ற
ஓர் நாட்குறிப்பில்
எழுத இடமற்று
எனது வேலைகள்
இறைந்து கிடந்தன.

குறுக்கும்
நெ
டு
க்
கு
ம்
கோணையாகவும் நேராகவும்
சிலவற்றை
மடித்தும் ஒடித்தும்

நிரப்பிவிட முடியவில்லை
ஒற்றைப் பக்கத்தில்.

எடுத்தெறிய இயலாத
எழுத்துக்களை
ஏற்றி வைக்க முடியாமல்
ஒன்று கூட்டி வைத்தேன்.

அதே போன்ற
இந்த நாட்குறிப்பில்
இன்று
எழுத ஏதுமற்று

வெற்றிடங்களால் அல்ல அல்ல

வெள்ளை எழுத்துக்களால்
நிரம்பி வழிகின்றன.

யார் கண்ணுக்கும்
புலப்படாதவாறு........