நானாகிய நான்
Friday, 30 October 2015
வளை கோடு
இரவின் நீலத்தில்
ஓர் மெல்லிய கோடு
எழுந்துவிட்டது.
என்றோ
வரப்போகும் கள்வனுக்காய்
எப்போதும்
தூக்கம் தொலைக்கும்
அந்தக் கோடு
வாசற்படிகளில் மட்டும்
ஏனோ
வளைவுற்று.
Sunday, 11 October 2015
என் பதாகை
எப்பொழுதும்
நான்
அதை வேண்டியிருக்கவில்லை.
எப்படியோ
என்னிடம்
ஒட்டிக்கொண்டுவிட்டது.
அதன் பொருளுக்கும்
என் குணங்களுக்கும்
அது பொருந்தவில்லை
என்றாலும்
அதன்
அர்த்தங்களும்
அனர்த்தங்களும்
என்னை விடுவதாயில்லை.
இதற்கு முன்பிருந்தது
அவ்வாறில்லை.
என்னை எல்லோருக்கும்
அடையாளப்படுத்தியது.
எப்போதும்
என் செவியையும்
மூளையையும்
தொடர்பிலிருத்தியது.
என்னிலிருந்து
தனித்து இயங்கவில்லை.
தூரே தள்ளிவைத்து
பயணித்தபோதும்
மௌனமாய் பின்
தொடர்ந்தது.
பொருந்தா முகமூடியொன்று
பொருத்தப் பட்டிருக்கையிலும்
ஏளனித்திராது
என்னிலிருந்தது.
(எனது புனைவைக்
காட்டிலும்)
எனது பெற்றோர்
இட்ட
எனது பெயர்.
Monday, 5 October 2015
நேர் விகிதம்
உன்னிலிருந்து
என்னை
தள்ளி வைக்கும்
சினமூட்டிய தருணங்கள்..
உன்னில்
என்னை
திணிக்கும்
சமாதான நிகழ்வுகள்....
இரண்டில்
ஒன்றின் விகிதம்
அதிகரிக்கையில்
நானும்
மற்றொன்றின் விகிதம்
அதிகரிக்கையில்
நீயும்
வெளிப்பட்டுவிடுகிறோம்.
எது? எது?
யார்? யார்?
என்பதை
நம்மிடமே விட்டுவிட்டு
தனித்து நிற்கிறது
காதல்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)