Sunday, 11 October 2015

என் பதாகை








எப்பொழுதும்
நான்
அதை வேண்டியிருக்கவில்லை.

எப்படியோ
என்னிடம்
ஒட்டிக்கொண்டுவிட்டது.

அதன் பொருளுக்கும்
என் குணங்களுக்கும்
அது பொருந்தவில்லை

என்றாலும்

அதன்
அர்த்தங்களும்
அனர்த்தங்களும்
என்னை விடுவதாயில்லை.

இதற்கு முன்பிருந்தது
அவ்வாறில்லை.
என்னை எல்லோருக்கும்
அடையாளப்படுத்தியது.

எப்போதும்
என் செவியையும்
மூளையையும்
தொடர்பிலிருத்தியது.

என்னிலிருந்து
தனித்து இயங்கவில்லை.

தூரே தள்ளிவைத்து
பயணித்தபோதும்
மௌனமாய் பின்
தொடர்ந்தது.

பொருந்தா முகமூடியொன்று
பொருத்தப் பட்டிருக்கையிலும்
ஏளனித்திராது
என்னிலிருந்தது.

(எனது புனைவைக்
காட்டிலும்)

எனது பெற்றோர்
இட்ட
எனது பெயர்.


1 comment: