Friday, 30 October 2015

வளை கோடு



இரவின் நீலத்தில்
ஓர் மெல்லிய கோடு
எழுந்துவிட்டது.

என்றோ
வரப்போகும் கள்வனுக்காய்
எப்போதும்
தூக்கம் தொலைக்கும்
அந்தக் கோடு

வாசற்படிகளில் மட்டும்
ஏனோ
வளைவுற்று.



No comments:

Post a Comment