Monday, 5 October 2015

நேர் விகிதம்




உன்னிலிருந்து
என்னை
தள்ளி வைக்கும்
சினமூட்டிய தருணங்கள்..

உன்னில்
என்னை
திணிக்கும்
சமாதான நிகழ்வுகள்....

இரண்டில்
ஒன்றின் விகிதம்
             அதிகரிக்கையில்
நானும்

மற்றொன்றின் விகிதம்
          அதிகரிக்கையில்
நீயும்
வெளிப்பட்டுவிடுகிறோம்.

எது? எது?
யார்? யார்?
என்பதை
நம்மிடமே விட்டுவிட்டு
தனித்து நிற்கிறது

காதல்....


No comments:

Post a Comment