Wednesday, 30 September 2015

மட்(க்)காத நீர்

மைல்கற்களுக்குள்
சிக்கிக் கொண்ட
சாலையில்
ஓர் இரயில்
ஓடிக்கொண்டிருக்கிறது.
தான் தவறவிட்ட
தண்டவாளங்களை தண்டித்துக்கொண்டு.

ஆங்கே
தூங்காதபோது
எழுந்திட்ட கனவொன்றும்
அலைந்து கொண்டிருக்கின்றது
அடையாளம்
மறந்த கண்களைக் கண்டுவிட.

தொடப்படாத
பூக்களின் ஊர்வலம்
பறை சாற்றுகிறது
தொலைக்கப்பட்டவர்களின்
சாவுச்செய்திகளை.

நெகிழி அடைத்த
வடிகால்களில்
நிரப்பப்படுகின்றன
நித்தமும்
மக்காத நீர்.

மஞ்சள் புன்னகையுதிர்க்கும்
நெருஞ்சிக்குமா தெரியாது
மஞ்சள் முகங்களின்
நெருடல்கள்.

ஆம்
வழிகாட்டிகள்
என்று
சென்றடைந்தன
விலாசங்களை??????

No comments:

Post a Comment