Friday, 28 November 2014

ம்மம்மம

இரவின் இருளில்.,
பகலின் நீளத்தில் ,
அமைதியின் மெளனத்தில,
தேடிக்கொண்டே. இருக்கிறேன்
என்க்கும். உனக்கும்
நடுவே
தொலைக்க்ப்பட்ட
வினாடிகளை

கிடைத்திடுமோ என்று சில நேரமும் .
கிடைத்தே விடுமோ !
என்று பல
நேரமும் .
பேசப்பட்ட வினாடிகளை விட
பேசப்படாத
வினாடிகளில்
நிறைய அன்பு
வெளிப்பட்டு விடுகிறது.
எனக்கும் உனக்குமான
உறவை
எங்ஙனம் விளக்குவது .
கண் மூடி கிடக்கையில் கூட
கண்ணுக்குள்
விரவிக் கொள்கிராய் .
உறக்கம் விரட்டிக் கொல்கிறாய் .
மேலெழும் மேகமென
மெல்ல வருகிறாய் .
மெல்ல கொல்கிராய் .
எங்கோ செல்கிறாய்.
எப்படியோ வருகிறாய் .
என்னதான் எண்ணம்
என்னை என்ன செய்வதுதான்
உன் எண்ணம் .
காலை
பேயும் உறங்கும் அதிகாலை .
இரவு
ஊர் அடங்கிய நள்ளிரவு
எந்நேரமும் எனை தொடர்வாயோ
எங்கெங்கு சென்றாலும்
தனிமையின்
சுவடை தொலைக்கச் செய்கிறாய் .
தனிமை என்னை
தொலைக்கச் செய்கிறாய் .
நீ புரியாத புதிரும்
இல்லை .
புலனாகா எதிரியும்
இல்லை .
என் செய்வது உன்னை.
எங்கு ஒளித்து
வைப்பது .
இரவில் கொஞ்சம் தொலைந்து
போகிரேனே .
என்னை விட்டு விட்டுப் போ
என் கனவே.
இன்று
ஒரு நாளேனும் .
உறங்கி விட்டுப் போகிறேன்

Wednesday, 26 November 2014

தயக்கம் ஒன்றே
தடுத்துக் கொண்டிருக்கிறது
உன்னையும்
என்னையும்

உன்னிலிருந்து
என்னையும்
என்னிலிருந்து
உன்னையும் .
தயங்கி தயங்கி
தளும்பி தளும்பி
தவறியே விடுமோ
நம். நட்பு