பகல்களை சரியவிட்டு
காத்திருக்கும்
இரவுகளில்
எழுந்துவிடும்
உறக்கமறுக்கும்
இறக்கமற்ற கனவுகளில்,
நீ துகிலுரித்த
எனது
ஆடைகளின் வண்ணங்கள்
எப்பொழுதும் குருதி நிறைத்து.
காமத்தின்
வலிநீக்கும் காதலில்
கசங்கிய மடிப்புகளின்
சுருக்கங்களில்
மிச்சமின்றி நீ
நிரப்பியவை உன் எச்சங்களே.
தொடமுடியா
தூரத்தில் உறங்கும்
என் உறக்கத்தை
அங்கேயே உறையவிட்டு
அடுத்துவரும்
இரவுகளின்
வெளிச்சம் அணைத்து
வெளியேறுகின்றாய்.
வறண்டுவிட்ட
என்
வசந்தவாயில்களில்
உன்
நிழல்களை காவலிருத்தி.
காத்திருக்கும்
இரவுகளில்
எழுந்துவிடும்
உறக்கமறுக்கும்
இறக்கமற்ற கனவுகளில்,
நீ துகிலுரித்த
எனது
ஆடைகளின் வண்ணங்கள்
எப்பொழுதும் குருதி நிறைத்து.
காமத்தின்
வலிநீக்கும் காதலில்
கசங்கிய மடிப்புகளின்
சுருக்கங்களில்
மிச்சமின்றி நீ
நிரப்பியவை உன் எச்சங்களே.
தொடமுடியா
தூரத்தில் உறங்கும்
என் உறக்கத்தை
அங்கேயே உறையவிட்டு
அடுத்துவரும்
இரவுகளின்
வெளிச்சம் அணைத்து
வெளியேறுகின்றாய்.
வறண்டுவிட்ட
என்
வசந்தவாயில்களில்
உன்
நிழல்களை காவலிருத்தி.
No comments:
Post a Comment