சபையெங்கும் நிறைந்து
சாளரங்கள் அடைக்கப்பட்டு.
இரவுகளை விழித்திருக்கச் செய்யும்
இமைகளை
வெப்பத்தில் குளிரச்செய்து.
ஓரங்க நாடகங்கள்
பலவியற்றி பலம் நழுவிக்கிடக்கும்.
பகல்முழுதும் இரவாக்கி
அவிழும் ஆடைகளை இறுக்கி இறுக்கி
இடை நொந்து கிடக்கும்.
வார்க்கப்படும் அமிலங்கள்
செரித்துக்கிடக்கும் அங்கங்களை.
தூரே நீண்டுகொண்டு போகும் வழிகளின்
துவக்கம் அறிய
திரும்ப இயலாது.
காமத்துப்பாலின் எல்லா சுவையும் சுகித்த போதும்
தாய்ப்பாலமுதம் சுரக்க இயலா கொங்கைகளை சுமந்து.
திறந்தே இருக்கும் வாசலெங்கும்
திரையிட்டு
கண்களைச் சிறையிருத்தும்
அவளின் மறுபக்கம்,
கோலமிடப்படாத வாசலெங்கும்
நிறைந்திருக்கும்.
.
சாளரங்கள் அடைக்கப்பட்டு.
இரவுகளை விழித்திருக்கச் செய்யும்
இமைகளை
வெப்பத்தில் குளிரச்செய்து.
ஓரங்க நாடகங்கள்
பலவியற்றி பலம் நழுவிக்கிடக்கும்.
பகல்முழுதும் இரவாக்கி
அவிழும் ஆடைகளை இறுக்கி இறுக்கி
இடை நொந்து கிடக்கும்.
வார்க்கப்படும் அமிலங்கள்
செரித்துக்கிடக்கும் அங்கங்களை.
தூரே நீண்டுகொண்டு போகும் வழிகளின்
துவக்கம் அறிய
திரும்ப இயலாது.
காமத்துப்பாலின் எல்லா சுவையும் சுகித்த போதும்
தாய்ப்பாலமுதம் சுரக்க இயலா கொங்கைகளை சுமந்து.
திறந்தே இருக்கும் வாசலெங்கும்
திரையிட்டு
கண்களைச் சிறையிருத்தும்
அவளின் மறுபக்கம்,
கோலமிடப்படாத வாசலெங்கும்
நிறைந்திருக்கும்.
.
No comments:
Post a Comment