Sunday, 14 December 2014

எழுத்து

கண்ணுக்கு வெளியே
உள்ள
கனவுகள் கட்டளையிட்டுக்கொண்டிருக்க..
மனதுக்குள்ளே
மரணிக்கப்பட்ட
கனவுகள்  என்னுடையவை.

வானுக்கும்
வெளிக்கும்
இடையே சில

அந்தரத்தில்
திரிசங்குவை தேடிக்கொண்டு ...

பணம் மட்டுமே
வெளிச்சம்
பாய்சசுவதால்
பிணம்போல் பலர்
பிழைத்துக்கிடக்கின்றனர்.

வாழும்போது
வாழ்க்கையை விரட்டி ...
வீழூம்போது
?
மட்டுமே
கேலி செய்து நிற்கிறது.

என்ன செய்ய...
எழுத்தாணி எழுந்து நிற்கிறது .
தலை(எழுத்து)
என்னவோ
ஆணிக்கடியே சிக்கிய
தவளை போல...

No comments:

Post a Comment