Wednesday, 24 December 2014

அம்மா ....

பொய் சொல்ல மாட்டார்
என் அம்மா
என்ற
பொய்யை காப்பாற்ற
மீண்டும் ....
உண்மை சொல்லப் பழகுகிறேன்.

எல்லாம் தெரிந்தவர்
என் அம்மா
என்ற
நம்பிக்கையை காப்பாற்ற
மீண்டும் ....
விரிக்க ஆரம்பிக்கிறேன்
கண்களோடு
காதுகளையும் ....

இடி,மின்னல்
அதிர்வின் நடுக்கத்தில்
இறுக்கி அணைத்து,
என் பயத்தை
ஒளித்துவைக்கப்பழகுகிறேன்.

இப்படியாக.....
சுற்றத்தின்
இறுக்கத்தில்
சுருங்கிப்போன சிறகுகளை
மெல்ல..மெல்ல...
மீட்டுத்தந்தாள்
என் மகளாய் பிறந்த
என்
அம்மா ....

1 comment: