Tuesday, 8 September 2015

சந்தைப்படுத்தும் சலனமூட்டிகள் ( கார்பன் (எ) கரித்தூள்)



விதைத்தவனும்
விழுங்கியவனும்
நட்டமுற
விற்றவன் மட்டுமே
வித்தகன் ஆனான்.

கண்ணால் காணவைத்து
காதால் கரையவைத்து
கனவுகளை
கரை தொலைக்க வைக்கின்றனர்.

மெய்யுருக
பொய் சொல்லி
பொம்மலாட்டம் ஆடுகின்றனர்.

கால்நடையாய்
செல்பவனை
கார் தந்து கடனாளியாக்கும்
வித்தை கற்றோர்.

நாள்தோறும்
நம்மைச் சுற்றி
தொங்கவிடப்படும்
வேடிக்கை தோரணங்கள்

வேந்தனையும்
வேடம் கட்ட வைத்திடுகின்றன.

ஏழாம் அறிவை மட்டும்
                          சற்றே
எட்டியிருக்க செய்துவிட்டு
காட்சிப்பிழைகளுக்குள்
காயமுறச் செய்கின்றன.

அயல்மொழியில்
நாகரீகமாக்கப்பட்ட
கார்பன் தூளைப்போல...







1 comment: