Thursday, 27 August 2015



மாயக்கண்ணா(டி) நீ!!
--------------------------

பாரதத்து மாயக்கண்ணன்
இராமனாய்
காலத்தின் மாயைகளுக்குள்..
தானே .....

நினைவிலும்
ஒருத்தியோடே இருந்தான்
ஆயிரம் மனையாளுடையான் மகன்.


கோபியர்க்கண்ணன்
காதலில் களித்திருந்தான்
கோதை ராமனோ
கானகத்திலும் தனித்திருந்தான்
தவித்திருந்தான்.


பாகுபலி என
உயிர் மீண்டவன்
பாரதம் படைத்தான்.

சகுனியின் சதிராட்டத்தில்
ஒதுங்கி நின்றான்.
பாஞ்சாலியின் மானத்துக்கு
காவல் வந்தான்.

வாலியின் வாழ்வுக்கோ
தடை போட்டான்.
வால்மீகியின் வாழ்க்கையை
மாற்றிப் போட்டான்.

காலத்தை தனக்குள்
வைத்துக்கொண்டே
காட்சிப் பொருளானான்.
நம்மை
கண்ணாடியாக்கி விட்டுவிட்டு.



No comments:

Post a Comment