Monday, 31 August 2015

பு(பொ)து விலாசம்

தெருவிளக்குக்கு எட்டாத தூரத்திலிருந்து
தேடல் ஊர்வலம்
நகர்வலம்
ஆரம்பித்தாயிற்று.

ஊருக்கொன்று
என்றிருந்தபோது
கைப்பற்றிவிட்டோம்.
தெருவிற்கிரண்டு என்றானதால்
தெருத்தெருவாய்.....

மதுவால் மதிமயங்குபவர்க்கு
                                             எல்லாம்
மதுக்கடைதானே
பொதுவிலாசமாய்.

தீர்த்தமாடிய தீர்த்தங்கரர்கள்
தேவதைகளுடன்
குடும்பம் நடத்தத் தொடங்கினர்
நடைபாதைச் சாலையில்.

வரிவரம்பு எட்டாதோர்
முழுவருமானமும்
அரசாங்கக் கஜானாவிற்கு.
அன்றைய வசூல்
அன்றன்றே!

கையிருப்பும்
மெய்யிருப்பும்
கரைந்திட
நான்கிரண்டு மாத
நடைபயில்கின்றனர்.

தேடித் தேடி
நிதம் சோர்வதோ

மதுவால்
மனம் பிறழ்ந்த
மாக்களைத் தேடும்
மாதுக்களே!!!!!


2 comments:

  1. வரிவரம்பு எட்டாதோர்
    முழுவருமானமும்
    அரசாங்கக் கஜானாவிற்கு.
    அன்றைய வசூல்
    அன்றன்றே!
    This i like the most

    ReplyDelete