Saturday, 15 August 2015

(வாழும் வகையறியா) ஊரின் கடைவழி...

ஊரின் கடைவழி
ஓர் ஆறு இருக்கிறது.
அகலமாக அல்ல
ஒல்லியாகவும் அல்ல.

ஊர்க்கறை வெளுக்கையில்
உளறப்பட்ட
ஊர்க்கதைகளை சுமந்து
சேர்த்து...

மரணத்தின் வழி தேடி
வந்தோரை
மடியில் தாங்கி..

கரையோர மணலில்
தன்  பங்கையும்
எடுத்துக் கொண்டு....

காத(லை)லில் கழித்திருந்த
வாலிபங்களையும்
வளைத்துக் கொண்டு....

கலவி கொண்ட
மீன்களோடும்........

ஓர் ஆறு
இருக்கிறது.

ஊர்க்கதைகள் உளற
யாருமற்று...

கலவி கொள்ள
மீன்களற்று..

மணலை மட்டுமே
மடி நிறைய
சுமந்து கொண்டு...

மரணத்தின் வழிதன்னில்....

ஓர் ஆறு இருக்கிறது.

ஒவ்வொரு
ஊரிலும்....


1 comment:

  1. சமயங்களில் மணல் கூட மரித்தே இருக்கிறது

    ReplyDelete