Monday, 17 August 2015

பறக்கவியலா சருகுகள் -- சாதி




சபை நாகரீகம்
கருதி
சலங்கைகள் கட்டவிழும்.

சற்றே நகர்ந்ததும்
மௌனமும் கட்டவிழும்.

கை கலந்து
கண் கலந்து
மொழிகளுக்குள் பேதமுணரும்.


தூரே செலுத்தி
துகிலுரிக்கும்.

மேடை தோறும் சிதறிப்போகும்.
மேடை பின்னே
கொதித்துப் பெருகும்.

இரவுகளில் அம்மணமாக்கப் பட்டு
பகலில் பட்டுடுத்தி நிற்கும்.

உயிரும் மெய்யும்
உரைத்து
உணர்வெழுப்பும்.

உடையவர் சேர்ந்து விட்டால்
உரிமைக் கொடி ஏந்தும்.

எரியூட்டும் நேரம் மட்டுமே
எழுந்தோடும்.

கூட்டியும் அள்ளியும்
முடியவில்லை.

ஈரெழுத்தில்
எண்ணவியலா உயிர்கொல்லும்
இந்த
பறக்கவியலா சருகுகளை.


நன்றி

ஆனந்த விகடன் 02.09.15

1 comment:

  1. This one is ultimate, Please do writing often...Shared in Facebook

    ReplyDelete