Sunday, 23 August 2015

ஊனமும் நாணமும்

ஊனமென்ற சொல்
காயமுறும் பொழுதெல்லாம்
பெயர் மாற்றுருக் கொள்கிறது.

மாற்றுத்திறனாளி களெனும் போதும்
மாற்றமொன்றும் எழவில்லை
மனங்களில்.

காத்திருத்தலின் வலிகள்
மலைத்துப் போகின்றன.
காயமுறும் பொழுதுகளில்.

தன்னம்பிக்கை கதை
சொல்லும் மாற்றுத்திறனாளிகளை
கவனிப்பதென்னவோ
மாற்றமில்லாதவர்கள்தான்

இவர்களின் அங்க அடையாளங்கள்
எல்லோருக்கும்
தெளிவாக.
மனமெங்கும் இழிவாக.

ஊனமறுத்து உயரேகும் போதும்
நாணமுறச்செய்யும்
நாணமற்றவர்களால்

நாணமுற்றுப் போகின்றன சில
ஊனங்கள்
ஊன் மட்டும் கொண்டவையாய்.

2 comments: